உள்ளூர் செய்திகள்
கலெக்டர் விஷ்ணு.

நெல்லை கிராமங்களில் மல்டி ஸ்பெசாலிட்டி சிகிச்சை அளிக்க ஏற்பாடு- கலெக்டர் பேட்டி

Published On 2022-05-07 09:59 GMT   |   Update On 2022-05-07 09:59 GMT
நெல்லை மாவட்ட கிராமங்களில் மல்டி ஸ்பெசாலிட்டி சிகிச்சை அளிக்க ஏற்பாடு நடப்பதாக கலெக்டர் விஷ்ணு பேட்டியளித்தார்.
நெல்லை:

தமிழக அரசின் ஓராண்டு சாதனை குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள சாதனை விளக்க புத்தக வெளியீட்டு  விழா  கலெக்டர் அலுவலக ஒருங்கிணைந்த கட்டுபாட்டு அறையில் நடைபெற்றது.

இதனுடன் தமிழகத்தில் முதன்முறையாக நெல்லை மாவட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் உடல்நல ஆலோசனை மற்றும் சிகிச்சை குறித்த டிஜிட்டல் பராமரிப்பு முறைக்காக தாய் கேர் நெல்லை என்ற செயலி அறிமுக நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 விழாவில் கலெக்டர் விஷ்ணு சாதனை விளக்க புத்தகத்தை வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் அதனை பெற்றுக்கொண்டார். பின்னர் நெல்லை அரசு மருத்துவமனையில் தாய் சேய் பிரிவு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியை பார்வையிட்டு நிருபர்களிடம்  கூறியதாவது:-


தமிழக அரசின் ஓராண்டு சாதனையாக பல்வேறு திட்டங்கள் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது.இதில் கூடுதலாக நெல்லை மாவட்டத்தில் சிறப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
 
அதன் தொடர்ச்சியாக தாய் கேர் நெல்லை செயலி மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. கர்ப்பணி தாய்மார்களை தொடர்ந்து கண்காணிப்பு செய்து அவர்களின் முழு உடல் பரிசோதனை தரவுகளும் டிஜிட்டல் முறையில் பராமரிப்பு செய்யப்படும்.

கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழப்புகள் இல்லாத நிலையை மாவட்டத்தில் உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம். இந்த திட்டம் தமிழகத்தில் நெல்லையில் முதன் முதலாக தொடங்கப்பட்டுள்ளது.

நெல்லை நீர்வளம், பொருநை அருங்காட்சியகம்,நெல்லை க்ராப்ட்ஸ் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 3 முக்கிய நோக்கங்களை முன்வைத்து அடுத்த கட்ட செயல்பாட்டில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தப்பட உள்ளது.திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு, சுகாதாரம்,கல்வி உள்ளிடவைகளில் கவனம் செலுத்தப்பட உள்ளது.கிராமப்புறங்களில் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News