ஆன்மிகம்
ஜலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் செல்லியம்மன் கோவில் முன்பு நின்று வழிபட்ட பக்தர்களை படத்தில் காணலாம்.

வழிபாட்டு தலங்கள் 3 நாட்கள் மூடல்: கோட்டை, செல்லியம்மன் கோவில் முன்பு நின்று வழிபட்ட பக்தர்கள்

Published On 2021-08-21 04:06 GMT   |   Update On 2021-08-21 04:06 GMT
வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டதால் வேலூரில் கோட்டை கோவில் மற்றும் செல்லியம்மன் கோவில் உள்படபல்வேறு கோவில்களில் வாசலிலேேய நின்று பக்தர்கள் வணங்கி விட்டு சென்றனர்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்க அவர்கள் அதிகம் வரும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுக்கு தடை விதித்து மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

மற்ற 4 நாட்கான திங்கள் முதல் வியாழக்கிழமை வரை மட்டுமே கோவில், தேவாலயம், மசூதிகளில் பொதுமக்கள் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பையொட்டி வீட்டில் வழிபட்ட பெண்கள் கோவிலுக்கு வந்தனர். ஆனால் கோவில் முடப்பட்டிருந்தது. பலர் வாசலிலேயே நின்று தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

மேலும் வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வழக்கம்போல் ஏராளமான பக்தர்கள் நேற்று வருகை தந்தனர். கோவில் நடை மூடப்பட்டிருந்ததால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். பின்னர் கோவில் முன்பு கற்பூரம் ஏற்றி வெளியே நின்று வழிபட்டனர்.

இதேபோன்று செல்லியம்மன் கோவிலும் மூடப்பட்டிருந்ததால் பக்தர்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர். எனினும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டாலும் சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வழக்கம்போல் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெற்றது.

Tags:    

Similar News