ஆன்மிகம்
கால பைரவர் கோவிலில் சிறப்பு பூஜைகள்
கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், காலபைரவ மகா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம் ஆகியன நடந்தது.
தொடர்ந்து கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பூசணிக்காயில் விளக்கேற்றி நேர்த்தி கடன் செலுத்தினர். இதேபோல் கிருஷ்ணகிரியை அடுத்த சூரன் குட்டையில் தஷ்ண கால பைரவர் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில் சூரன் குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பூசணிக்காயில் விளக்கேற்றி நேர்த்தி கடன் செலுத்தினர். இதேபோல் கிருஷ்ணகிரியை அடுத்த சூரன் குட்டையில் தஷ்ண கால பைரவர் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில் சூரன் குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.