செய்திகள்

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ராஜினாமா- பாஜக தோல்விக்கு பொறுப்பேற்றார்

Published On 2018-12-12 06:41 GMT   |   Update On 2018-12-12 06:41 GMT
மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள நிலையில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தன் பதவியை ராஜினாமா செய்தார். #MadhyaPradeshElections2018 #Mayawati #BSPSupportCongress
போபால்:

மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜக 109 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 1 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 4 தொகுதிகளில் வென்றுள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மெஜாரிட்டியை நெருங்கிய காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பதற்கு, மேலும் 2 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளனர்.



பாஜக ஆட்சியை இழந்துள்ள நிலையில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று மதியம் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அங்கு ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சவுகான், ‘நான் இப்போது சுதந்திரமாக இருக்கிறேன். ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளேன். பாஜகவின் தோல்விக்கு நான் பொறுப்பு ஏற்கிறேன். கமல் நாத்துக்கு என் வாழ்த்துக்கள்’ என கூறினார். #MadhyaPradeshElections2018 #Mayawati #BSPSupportCongress
Tags:    

Similar News