ஆன்மிகம்
முருகனுக்கு அபிஷேகம்

கார்த்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

Published On 2020-09-09 05:02 GMT   |   Update On 2020-09-09 05:02 GMT
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுகருக்கும், மேலக்குமரருக்கும் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுகருக்கும், மேலக்குமரருக்கும் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்பு சாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதுபோல் கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி-தெய்வானை, அமிர்தகர சுப்பிரமணியசுவாமிக்கு பால் உள்பட பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடைபெற்றன. தோப்புத்துறை கைலாசநாதர் கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பக விநாயகர் கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள நாட்டுமடம் மாரியம்மன்கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடித்து அர்சனை செய்யாமலும், தீபம் ஏற்றாமலும் முருகனை வழிபட்டனர்.
Tags:    

Similar News