ஆன்மிகம்
தூய பாத்திமா

தூய பாத்திமா அன்னை ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2019-10-11 04:08 GMT   |   Update On 2019-10-11 04:08 GMT
கண்டர்விளாகம் தூய பாத்திமா அன்னை ஆலய திருவிழா மற்றும் ஆலய அர்ச்சிப்பு விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
கண்டர்விளாகம் தூய பாத்திமா அன்னை ஆலய திருவிழா மற்றும் ஆலய அர்ச்சிப்பு விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.

விழாவையொட்டி இன்று மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி புதிய கொடிமரம் அர்ச்சித்து திருவிழா கொடியை ஏற்றிவைத்து மறையுரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கு மறைகல்வி ஆண்டுவிழா நடக்கிறது.

தொடர்ந்து விழா நாட்களில் தினமும் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு திருப்பலி, இரவு 8 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

13-ந் தேதி மாலை 4 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இதில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி ஆலயத்தை அர்ச்சித்து திருப்பலி நிறைவேற்றுகிறார்.

19-ந்தேதி காலை 8 மணிக்கு கோவை அருட்பாணியாளர் அல்போன்ஸ் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைேவற்றுகிறார்.

தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு ஆடம்பர மாலை திருப்புகழ், இரவு 8 மணிக்கு தேர்பவனி, 20-ந்தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் திருவிழா திருப்பலிக்கு மறைமாவட்ட முதன்மை பணியாளர் கிலேரியஸ் தலைமை தாங்குகிறார். சென்னை அருட்பணியாளர் ஜெகத் கஸ்பார் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம், இரவு 7 மணிக்கு நடனப்போட்டி நடைபெறுகிறது.
Tags:    

Similar News