செய்திகள்
கோப்புபடம்

ராயக்கோட்டை அருகே காரில் டீசல் திருடிய 2 பேர் கைது

Published On 2021-04-05 09:41 GMT   |   Update On 2021-04-05 09:41 GMT
ராயக்கோட்டை அருகே காரில் டீசல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

ராயக்கோட்டை அருகே உள்ள திம்ஜேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரகு (வயது 25). விவசாயி. இவர் தனது காரை, முத்தம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் நிறுத்திவிட்டு வயலுக்கு சென்றார். பின்னர் மீண்டும் வந்து பார்த்த போது, அவரது காரில் இருந்து 2 பேர் டீசலை திருடி கொண்டிருந்தனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் பிடித்து ராயக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குப்பதிவு செய்து, காரில் டீசல் திருடிய காலேப்பள்ளி ராதாகிருஷ்ணன் (42), ஓசூர் மீனவர் தெருவை சேர்ந்த ரமேஷ் (40) ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

Tags:    

Similar News