செய்திகள்
கிரீஸ் நாட்டிற்கான இந்திய தூதராக அம்ரித் லுகுன் நியமனம்
கிரீஸ் நாட்டிற்கான இந்தியாவின் புதிய தூதராக அம்ரித் லுகுன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
கிரீஸ் நாட்டிற்கான அடுத்த இந்திய தூதராக அம்ரித் லுகுன் நியமிக்கப் பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இவர் 1989-ம் ஆண்டைச் சேர்ந்த ஐ.எப்.எஸ் அதிகாரி ஆவார். இவரது பணி நியமனம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அம்ரித் லுகுன் இதற்கு முன் சூடான் மற்றும் ஏமன் நாடுகளுக்கான இந்திய தூதராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.