செய்திகள்
முதியவர் பலி

உத்திரமேரூர் அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பலி

Published On 2021-11-15 13:53 GMT   |   Update On 2021-11-15 13:53 GMT
உத்திரமேரூர் அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த காவனூர் புதுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 65). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். மழையின் காரணமாக கடந்த 2 நாட்களாக இவரது வீட்டில் மின்சாரம் இல்லாமல் இருந்தது. இதுகுறித்து அவர் புகார் செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் யாரும் சரி செய்யாததால் நேற்று பகல் 12 மணி அளவில் பழனி வீட்டின் அருகே இருந்த மின்கம்பத்தில் ஏறி சரி செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென அவர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பழனி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News