செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிற்ற 11 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிற்ற 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்ட மதுவிலக்கு போலீசார் மற்றும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்ததாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 11 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 99 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.