செய்திகள்
இடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் 43 தாசில்தார்கள் இடமாற்றம்- கலெக்டர் உத்தரவு

Published On 2021-10-26 09:35 GMT   |   Update On 2021-10-26 09:35 GMT
விழுப்புரம் தனி தாசில்தார் கோவர்தனன் மேல்மலையனூர் தனி தாசில்தாராகவும், வானூர் தனி தாசில்தார் சரவணன் மரக்காணம் தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

திருவெண்ணெய்நல்லூர் தனி தாசில்தாராக பணிபுரிந்து வரும் ஆனந்தகுமார் விழுப்புரம் தாசில்தாரராகவும், விழுப்புரம் தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) இளவரசன் விக்கிரவாண்டி தாசில்தாராகவும், மரக்காணம் தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) உமா மகேஸ்வரி வானூர் தாசில்தாராகவும், விழுப்புரம் டாஸ்மாக் தனி தாசில்தார் பாஸ்கரதாஸ் திருவெண்ெணய்நல்லூர் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, விழுப்புரம் தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) திரு நாவுக்கரசு கண்டாச்சிபுரம் தாசில்தாராகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் வசந்த கிருஷ்ணன் திண்டிவனம் தாசில்தாராகவும், விழுப்புரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல தனி தாசில்தார் செஞ்சி தாசில்தாராகவும், விழுப்புரம் தனி தாசில்தார் கோவர்தனன் மேல்மலையனூர் தனி தாசில்தாராகவும், வானூர் தனி தாசில்தார் சரவணன் மரக்காணம் தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும் விழுப்புரம் தாசில்தார் வெங்கடசுபபிரமனியன் விழுப்புரம் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், விக்கிரவாண்டி தாசில்தார் தமிழ்ச்செல்வி மரக்காணம் தேசிய நெடுஞ்சாலை (நில எடுப்பு) தாசில்தாரகவும் என்று மொத்தம் 43 தாசில்தார்கள் மாவட்டத்திற்குள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News