விளையாட்டு
பஞ்சாப் அணி வீரர்கள்

ராஜஸ்தானுக்கு 190 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப் அணி

Published On 2022-05-07 12:04 GMT   |   Update On 2022-05-07 12:04 GMT
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ அரை சதம் அடித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் 52-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி பஞ்சா அணி வீரர்கள் களமிறங்கி ஆடினர்.

தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோ-தவான் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். தவான் 12 ரன்னில் இருக்கும் போது அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆனார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 47 ரன்களை எடுத்தது. அடுத்து வந்த ராஜபக்சா 27 ரன்னில் சாஹல் பந்தில் போல்ட் ஆனார்.

அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் அகர்வால் 15 ரன்னில் சாஹல் பந்தில் அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பேர்ஸ்டோ அரை சதம் அடித்து சாஹல் பந்தில் அவுட் ஆனார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் தரப்பில் சாஹல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Tags:    

Similar News