செய்திகள்
வேலை வாய்ப்பு முகாம்

பெரம்பலூரில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

Published On 2021-10-26 12:52 GMT   |   Update On 2021-10-26 12:52 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான நபர்களை கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யவுள்ளனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மீண்டும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படவுள்ளது. அதன்படி வருகிற 29-ந்தேதி காலை 10 மணியளவில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான நபர்களை கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யவுள்ளனர். முகாமில் 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம். மேலும் முகாமில் ஆசிரியர், டிரைவர் பணியிடங்களுக்கு ரூ.10 ஆயிரம் மாத ஊதியத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது. பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறு, குறு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையானவர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News