செய்திகள்
தற்கொலை

மேட்டுப்பாளையத்தில் காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை

Published On 2019-11-05 10:24 GMT   |   Update On 2019-11-05 10:24 GMT
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சங்கர் நகர் 5-வது வீதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் மாரிமுத்து (வயது 21). இவர் அந்த பகுதியில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோரில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் மாரிமுத்துவுக்கு திருமணமாகி கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதிக மழை காரணமாக அப்பெண்ணுக்கு வலிப்பு ஏற்பட்டு அவர் பரிதாபமாக இறந்தார்.

இதனால் மாரிமுத்து மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து பூச்சி மருந்தை குடித்தார்.

சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மாரிமுத்துவை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த தகவல் கிடைத்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட மாரிமுத்துவின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News