செய்திகள்
திருப்பூர் கிழக்கு,வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் கூட்டம் - நாளை நடக்கிறது
கூட்டத்திற்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்குகிறார்.
திருப்பூர்:
திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், செய்தித்துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் மற்றும் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு திருப்பூரில் கட்சியின் தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
கூட்டத்திற்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்குகிறார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் முன்னிலை வகிக்கிறார். மேலும் சிறப்பு அழைப்பாளராக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி கலந்து கொள்கிறார்.
கூட்டத்தில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள், பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, முப்பெரும் விழா, உள்ளாட்சித் தேர்தல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.