செய்திகள்
இட்லி - சாம்பார், சட்னி

இட்லி, தோசையை விரும்பி சாப்பிட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்

Published On 2021-04-07 08:23 GMT   |   Update On 2021-04-07 08:23 GMT
இட்லி, தோசையை விரும்பி சாப்பிட்ட எல்லை பாதுகாப்பு படையினர் நன்றாக உள்ளதாக தெரிவித்தனர்.
மதுரை:

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் தேர்தலையொட்டி எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வழக்கமாக அவர்கள் இதுபோன்ற பாதுகாப்பு பணிகளின்போது ரொட்டி, சப்பாத்திகளை உணவாக எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் நேற்று தேர்தலையொட்டி அந்த பகுதியில் எந்த ஓட்டல்களும் செயல்படவில்லை. இதையடுத்து அந்த பகுதியில் திறக்கப்பட்டிருந்த ஒரு ஓட்டலில் இட்லி, தோசை, பொங்கல் விற்கப்பட்டது.

அதனை வாங்கி எல்லை பாதுகாப்பு படையினருக்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் அதனை சாப்பிட்டு நன்றாக இருந்ததாக உள்ளது என தெரிவித்தனர். வழக்கத்துக்கு மாறாக தென்னக உணவான இட்லி, தோசையை சாப்பிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.

Tags:    

Similar News