செய்திகள்
கொரோனா தடுப்பூசி

அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்- வட்டார மருத்துவ அலுவலர் தகவல்

Published On 2021-03-03 08:34 GMT   |   Update On 2021-03-03 08:34 GMT
கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சுகாதார துறை மூலம் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
சிக்கல்:

கீழ்வேளூர் வட்டார மருத்துவ அலுவலர் அருண்பிரபு ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சுகாதார துறை மூலம் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.தேவூரில் உள்ள வட்டார மருத்துவமனையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேல் இணை நோய் அதாவது சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போட வருபவர்கள் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட்டு, வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டு வர வேண்டும். கொரோனா தடுப்பூசிக்கு கட்டணம் எதுவும் இல்லை. இவ்வாது அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News