செய்திகள்
தீ விபத்து

வேலாயுதம்பாளையம்: கரும்பு தோட்டத்தில் தீ விபத்து

Published On 2019-10-04 17:08 GMT   |   Update On 2019-10-04 17:08 GMT
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம், என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி (வயது50). இவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. அதில் கரும்பு பயிரிட்டுள்ளார். தோட்டத்தில் கரும்பு வெட்டிய கரும்பு சருகுக்கு தீவைத்தார். இந்நிலையில் கரும்புசருகில் எரிந்து கொண்டிருந்த தீ அருகிலிருந்த தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து வேகமாக எரிய ஆரம்பித்தது. 

அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். முழுவதுமாக அணைக்க முடியவில்லை. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து அருகிலிருந்த தோட்டங்களுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. 
Tags:    

Similar News