உள்ளூர் செய்திகள்
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் மோதல்: தி.மு.க.- அ.தி.மு.க.வை சேர்ந்த 2 பேர் மீது வழக்கு
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் மோதல் ஏற்பட்டது தொடர்பாக தி.மு.க.- அ.தி.மு.க.வை சேர்ந்த 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை கென்னடி தெருவில் உள்ள ரேஷன் கடையில் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அந்த பணியை தி.மு.க.வினர் பார்வையிட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த அ.தி.மு.க.வை சேர்ந்த கணேஷ் (வயது42) என்பவருக்கும், தி.மு.க.வை சேர்ந்த மணி என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் காயம் அடைந்த 2 பேரும் நெல்லை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் மணி மீதும், மணி கொடுத்த புகாரின் பேரில் கணேஷ் மீதும் பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.