ஆன்மிகம்
ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் 16-ந்தேதி பங்குனி தேர்த்திருவிழா

Published On 2021-03-06 07:09 GMT   |   Update On 2021-03-06 07:09 GMT
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 16-ந்தேதி நடைபெறுகிறது.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 16-ந் தேதி நடைபெறுகிறது.

அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

வருகிற 30-ந்தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். ஏப்ரல் 1-ந் தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News