செய்திகள்
டிடிவி தினகரன்

கடன் வழங்குவதாக ஆள் பிடிக்கிறார்கள்- டி.டி.வி. தினகரன் கண்டனம்

Published On 2020-12-25 12:45 GMT   |   Update On 2020-12-25 12:45 GMT
கூட்டுறவு வங்கிகளின் கடனுதவி சரியான நபர்களுக்கு சென்று சேருவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் பல ஊர்களில் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதாக கூறி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பூத் கமிட்டிகளுக்கு ஆள் பிடிக்கும் வேலைகளில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த நடவடிக்கை கண்டனத்துக்குறியது.

ஏற்கனவே நலிந்து கிடக்கும் கூட்டுறவு அமைப்புகளை மேலும் சீர்குலைக்கும் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை ஆளுங்கட்சியினர் உடனடியாக நிறுத்த வேண்டும். கூட்டுறவு வங்கிகளின் கடனுதவி சரியான நபர்களுக்கு சென்று சேருவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். எந்தவிதமான முறைகேட்டுக்கும் இடமளிக்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News