செய்திகள்
கைது

பணம் வைத்து சூதாடியவர் கைது

Published On 2021-10-23 12:27 GMT   |   Update On 2021-10-23 12:27 GMT
பணம் வைத்து சூதாடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோகைமலை:

வடசேரி ஊராட்சி பாலசமுத்திரம்பட்டியில் உள்ள முள்காட்டில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது சூதாடிக்கொண்டிருந்த 3 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இருப்பினும் அதில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் தாயனூர் மேல தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தப்பி ஓடிய காவல்காரன்பட்டி ராஜேந்திரன், புழுதேரி பிச்சைமணி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News