செய்திகள்
தற்கொலை

பாப்பாரப்பட்டி அருகே புதுமாப்பிள்ளை தற்கொலை

Published On 2019-12-05 16:43 GMT   |   Update On 2019-12-05 16:43 GMT
பாப்பாரப்பட்டி அருகே திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ராஜதுரை (வயது23). கட்டிட மேஸ்திரி. கொல்லஅள்ளியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (20). இவர்களுக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ராஜதுரை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ராஜதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News