செய்திகள்
கைது

பெரியபாளையம் அருகே மணல் கடத்திய வாலிபர் கைது

Published On 2019-12-06 06:46 GMT   |   Update On 2019-12-06 06:46 GMT
பெரியபாளையம் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள திருக்கண்டலம் கிராமத்தில் உள்ள ஏரியில் மோட்டார் சைக்கிள்கள் மூலம் மணல் கடத்துவதாக பெரியபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு மணல் கடத்தி வந்த 2 மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்தனர். அப்போது ஒருவர் மட்டும் சிக்கினார். அவர் திருக்கண்டலம் கிராமம் தலையாரி தெருவை சேர்ந்த பிரகாஷ் (25) என்பது தெரிய வந்தது. மேலும்,தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News