செய்திகள்
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 3 பேர் கைது
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் பகுதியில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் அவர்கள் கீழ்வேளூர் அருகே குற்றம்பொருத்தான் இருப்பு ரோட்டு பகுதியை சேர்ந்த குமரேசன் (வயது31), உத்தமசோழபுரத்தை சேர்ந்த சக்திவேல் (21), ஏரவாஞ்சேரியை சேர்ந்த ஜெயசீலன் (28) ஆகியோர் என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.