ஆன்மிகம்
தஞ்சை மூலைஅனுமார் கோவிலில் சிறப்பு வழிபாடு
வடைமாலைகளால் மூலைஅனுமாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து 1008 எலுமிச்சை பழ மாலை சாற்றி தீபாராதனை நடைபெற்றது.
தஞ்சை மேலவீதியில் புகழ் பெற்ற மூலைஅனுமார் கோவில் உள்ளது. மூலைஅனுமாரின் வாலில் சனீஸ்வரபகவான் உள்பட நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். 18 அமாவாசை தொடர்ந்து மூலை அனுமாரை வழிபட்டு வந்தால் நல்ல உடல்நலமும், நீங்காத செல்வமும், குறையாத ஆயுளும் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். மூலை அனுமார் கோவிலில் நேற்று பங்குனிமாத அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலையில் லட்சராமநாம ஜெபமும், வறுமை மற்றும் கடன்தொல்லை நீக்கும் தேங்காய் துருவல் அபிஷேகமும், சிறப்பு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடைபெற்றது.
மாலையில் வடைமாலைகளால் மூலைஅனுமாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து 1008 எலுமிச்சை பழ மாலை சாற்றி தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, உதவி ஆணையர் கிருஷ்ணன், செயல்அலுவலர் மாதவன், கோவில் மேற்பார்வையாளர் ரெங்கராஜன் ஆகியோர் செய்து இருந்தனர்.
மாலையில் வடைமாலைகளால் மூலைஅனுமாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து 1008 எலுமிச்சை பழ மாலை சாற்றி தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, உதவி ஆணையர் கிருஷ்ணன், செயல்அலுவலர் மாதவன், கோவில் மேற்பார்வையாளர் ரெங்கராஜன் ஆகியோர் செய்து இருந்தனர்.