செய்திகள்
தேவர்குளம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
தேவர்குளம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை:
தேவர்குளம் அருகே உள்ள தெற்கு அச்சம்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது 44). இவர் அப்பகுதியில் உள்ள பூலுடையார் சாஸ்தா கோவில் நிர்வாகியாக உள்ளார்.
சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கோவிலை அடைத்துவிட்டு முத்துக்குமார் வீடு திரும்பினார். பின்னர் காலை கோவிலுக்கு சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ரூ.2 ஆயிரம் பணம் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து முத்துக்குமார் தேவர்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.