செய்திகள்
செங்கத்தில் போலீசார் வாகன தணிக்கை

செங்கத்தில் போலீசார் வாகன தணிக்கை- தேவையின்றி சுற்றியவர்களுக்கு அபராதம்

Published On 2021-06-09 10:50 GMT   |   Update On 2021-06-09 10:50 GMT
செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே போலீசார் துணை சூப்பிரண்டு சரவணகுமரன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
செங்கம்:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொற்று குறைந்ததையடுத்து கடந்த 7-ந் தேதி முதல் கடைகள் திறக்க தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு தொடர்கிறது. இந்த நிலையில் செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே போலீசார் துணை சூப்பிரண்டு சரவணகுமரன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து இ-பதிவு ஆவணங்கள் இல்லாமல் வந்த வாகனங்கள் மற்றும் செங்கம் பகுதியில் தேவையின்றி சாலையில் சுற்றியவர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாலை 5 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்டவைகள் அத்யாவசிய தேவையின்றி வரக் கூடாது எனவும் மீறி வரும் வாகனங்கள் மீது அபராதம் விதித்து வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்து அவர்களை அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News