செய்திகள்
செங்கத்தில் போலீசார் வாகன தணிக்கை- தேவையின்றி சுற்றியவர்களுக்கு அபராதம்
செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே போலீசார் துணை சூப்பிரண்டு சரவணகுமரன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
செங்கம்:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொற்று குறைந்ததையடுத்து கடந்த 7-ந் தேதி முதல் கடைகள் திறக்க தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு தொடர்கிறது. இந்த நிலையில் செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே போலீசார் துணை சூப்பிரண்டு சரவணகுமரன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து இ-பதிவு ஆவணங்கள் இல்லாமல் வந்த வாகனங்கள் மற்றும் செங்கம் பகுதியில் தேவையின்றி சாலையில் சுற்றியவர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாலை 5 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்டவைகள் அத்யாவசிய தேவையின்றி வரக் கூடாது எனவும் மீறி வரும் வாகனங்கள் மீது அபராதம் விதித்து வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்து அவர்களை அனுப்பி வைத்தனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொற்று குறைந்ததையடுத்து கடந்த 7-ந் தேதி முதல் கடைகள் திறக்க தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு தொடர்கிறது. இந்த நிலையில் செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே போலீசார் துணை சூப்பிரண்டு சரவணகுமரன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து இ-பதிவு ஆவணங்கள் இல்லாமல் வந்த வாகனங்கள் மற்றும் செங்கம் பகுதியில் தேவையின்றி சாலையில் சுற்றியவர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாலை 5 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்டவைகள் அத்யாவசிய தேவையின்றி வரக் கூடாது எனவும் மீறி வரும் வாகனங்கள் மீது அபராதம் விதித்து வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்து அவர்களை அனுப்பி வைத்தனர்.