செய்திகள்
வடமதுரை அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் மாயம்
வடமதுரை அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:
வடமதுரை அருகில் உள்ள தென்னம்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட ஆண்டிபட்டியை சேர்ந்தவர் சந்தோஷ்(20). தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் வளர்மதி கொடுத்த புகாரின்பேரில் வடமதுரை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
இதேபோல நாடுகண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா(26). கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவர் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது உறவினர் வெங்கடேஸ்வரன் கொடுத்த புகாரின்பேரில் வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.