செய்திகள்
பிரதமர் மோடி

கொரோனா தடுப்பு நடவடிக்கை: முக்கிய துறை அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

Published On 2021-04-29 15:18 GMT   |   Update On 2021-04-29 15:18 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய துறை அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கோரத்தாண்டம் ஆடி வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

நாட்டில் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதி, தடுப்பூசி, மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

இந்த சூழ்நிலையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. மேலும், இந்தியாவுக்கு பல வெளிநாடுகள் உதவி செய்து வருகின்றன.

இந்நிலையில், நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் முக்கிய துறை அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை நடைபெற உள்ளது. 

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆக்சிஜன், படுக்கை வசதி, மருந்து உள்ளிட்டவற்றை அதிகப்படுத்துவது, வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News