ஆன்மிகம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பரிகார பூஜைகள் நடத்த அனுமதிக்க கோரிக்கை
கொரோனா ஊரடங்கு காரணமாக சில தளர்வுகளுடன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கோவிலில் பரிகார பூஜைகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன் ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கொரோனா ஊரடங்கு காரணமாக சில தளர்வுகளுடன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்தநிலையில் நாகை மாவட்டம், திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், பீமரத சாந்தி போன்ற பரிகார பூஜைகளை மேற்கொள்வது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் பரிகார பூஜைகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. எனவே திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பரிகார பூஜைகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக சில தளர்வுகளுடன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்தநிலையில் நாகை மாவட்டம், திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், பீமரத சாந்தி போன்ற பரிகார பூஜைகளை மேற்கொள்வது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் பரிகார பூஜைகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. எனவே திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பரிகார பூஜைகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.