ஆன்மிகம்
வருகிற 28-ந் தேதி சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை சாத்தப்படும் என அறிவிப்பு
சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி :
சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் அதிகாலை 5.30 மணி அளவில் நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுவது நடைமுறையில் உள்ளது.
வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை)மாலை 3 மணி அளவில் கொள்ளிடம் வட திருக்காவிரியில் சமயபுரம் மாரியம்மன் தீர்த்தவாரி கண்டருள செல்வதால் அன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு மறுநாள் (29-ந்தேதி) காலை 5.30 மணிக்கு வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு மூலஸ்தான அம்பாள் சேவை நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் அதிகாலை 5.30 மணி அளவில் நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுவது நடைமுறையில் உள்ளது.
வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை)மாலை 3 மணி அளவில் கொள்ளிடம் வட திருக்காவிரியில் சமயபுரம் மாரியம்மன் தீர்த்தவாரி கண்டருள செல்வதால் அன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு மறுநாள் (29-ந்தேதி) காலை 5.30 மணிக்கு வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு மூலஸ்தான அம்பாள் சேவை நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.