செய்திகள்
கோத்தகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
கோத்தகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி:
கோத்தகிரி அருகே உள்ள சுள்ளிக்கூடு கிராமத்தில் பொதுமக்கள் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விதிமுறைகளை மீறி அங்கு சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நேற்று கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் அருண் குமார் தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். இதில், பிரகாஷ் (வயது33), ராஜேஷ் (34), தேவராஜ் (37) ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.