செய்திகள்
களமாவூர் மேம்பால பணிகள் திருநாவுக்கரசர் எம்.பி. ஆய்வு
களமாவூர் ரெயில்வே கேட் மேம்பாலம் கட்டுவதற்கு வேலைகள் தொடங்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆகியும் பணிகள் முடியவில்லை. இதனை திருநாவுக்கரசர் எம்பி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கீரனூர்:
கீரனூரிலிருந்து திருச்சி செல்லும் வழியில் உள்ள களமாவூர் ரெயில்வே கேட் மேம்பாலம் கட்டுவதற்கு வேலைகள் தொடங்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆகியும் பணிகள் முடியவில்லை.
நிதிபற்றாக்குறை காரணமாக பணிகள் கிடப்பில் உள்ளன. ஏற்கனவே கட்டப்பட்ட இரும்புகம்பிகள், சிமெண்ட் பூச்சுக்கள் மற்றும் ரோடுகள் பெருமளவில் சேதமடைந்து விட்டன.
நின்ற பணிகளை திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்.பி. திருநாவுக்கரசர் முயற்சி எடுத்து ஒப்பந்தகாரர்களை மாற்றி மீண்டும் தொடங்கி வைத்திருக்கிறார். அப்பணிகளை திருநாவுக்கரசர் எம்.பி. நேரில் சென்று ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் புதுகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன்,காங்கிரஸ் தி.மு.க. பிரமுகர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.