ஆன்மிகம்
பெருமாள்

முசிறி அருகே பெருமாள் கோவிலில் 3 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை

Published On 2021-09-24 04:52 GMT   |   Update On 2021-09-24 04:52 GMT
தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
முசிறி அருகே தலைமலை அடிவாரத்தில் அமைந்துள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை உற்சவம் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். ஆனால், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கிலும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்த 3 நாட்கள் தடை அக்டோபர் மாதம் 31 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, புரட்டாசி மாதத்தில் வரும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என்று கோவில் செயல் அலுவலர் சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:    

Similar News