செய்திகள்
மகாராஷ்டிராவில் 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
மகாராஷ்டிராவில் இன்று அதிகாலை 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து வடக்கு-வடகிழக்கு பகுதியில் இருந்து 96 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 4.10 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டரில் 3.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் உடனடியாக தெரிய வரவில்லை.