செய்திகள்
தடுப்புச்சுவர் இல்லாததால் கால்வாயில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த வியாபாரி பலி
திருவாலங்காடு அருகே தடுப்புச்சுவர் இல்லாததால் கால்வாயில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த வியாபாரி இறந்தார்.
பள்ளிப்பட்டு:
திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் பகுதியை சேர்ந்தவர் ரஹமத்துல்லா (வயது 40). மீன் வியாபாரி. இவர் ஏரியில் உள்ள மீன்களை குத்தகைக்கு எடுத்து விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் திருவாலங்காடு ஏரியை அவர் குத்தகைக்கு எடுத்தார். அந்த ஏரியை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் ரஹ்மத்துல்லா புறப்பட்டு சென்றார்.
ஏரியை பார்வையிட்ட பின் அவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
வேணு கோபாலபுரம் என்ற இடத்தில் செல்லும்போது சாலையோரம் தடுப்புச்சுவர் இல்லாமல் இருந்த கால்வாயில் அவர் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் விழுந்தார். இதில் காலவாய் நீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தாார்.
இது குறித்து திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.