ஆன்மிகம்
மாரியம்மன்

அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளும் திருவிழா

Published On 2021-03-24 07:57 GMT   |   Update On 2021-03-24 07:57 GMT
நிலக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஜாதி,மத வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் கலந்து கொள்கிறார்கள்.
நிலக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஜாதி,மத வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் கலந்து கொள்கிறார்கள். குறிப்பாக இந்த திருவிழாவின்போது அனைத்துத் தரப்பினரும் ஆர்வத்துடன் கூட்டம் கூட்டமாக விடியும் வரை காத்திருந்து அம்மன் பூப்பல்லக்கில் வரும் காட்சியை பக்தி பரவசத்துடன் கண்டு மகிழ்ந்து அம்மனின் அருளை பெற்று செல்கிறார்கள்.

இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் அக்னி சட்டி, மாவிளக்கு, முளைப்பாரி, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து அருளை பெற்று வருகிறார்கள். ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், சிறுமியர்களும், மேளதாளம் முழங்க பக்திபரவசத்துடன் தீச்சட்டி எடுத்து அம்மனுக்கு காணிக்கை செலுத்துவது பக்தி பரவசமாக இருக்கும்.


Tags:    

Similar News