செய்திகள்
கலெக்டர் விஜயகார்த்திகேயனுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்திய காட்சி.

கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு

Published On 2021-06-02 06:51 GMT   |   Update On 2021-06-02 06:51 GMT
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கணியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
மடத்துக்குளம்:

கணியூர் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசி முகாமை கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது பொதுமக்களிடம் முக கவசம் அணிவதன் அவசியம் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை முழுமையாக பாதுகாத்து கொள்ள வேண்டும். என்று அறிவுரைகளை வழங்கினர்.மேலும் கொரோனா நோய் சிகிச்சை குறித்து வட்டார மருத்துவ அலுவலர் விஜயலட்சுமியிடம் கேட்டறிந்தனர். 

ஆய்வின்போது முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் கீதா, மடத்துக்குளம் வருவாய் வட்டாட்சியர் கனிமொழி, தி.மு.க திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், தெற்கு மாவட்ட பொருளாளர் முபாரக் அலி, உடுமலை நகர செயலாளர் மத்தீன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாதிக்பாட்ஷா, கணியூர் பேரூராட்சி செயல் அலுவலர் தாஜ் நிஷா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தாமரைக்கண்ணன், சுகாதார ஆய்வாளர் பொன்ஆண்டவர் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News