செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்

தென் மாவட்டங்களில் 3 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு

Published On 2021-03-05 08:46 GMT   |   Update On 2021-03-05 08:46 GMT
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும். சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும் என்று ஆய்வு மைய இயக்குனர் கீதா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News