செய்திகள்
கைது

வல்லத்தில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

Published On 2021-07-26 11:31 GMT   |   Update On 2021-07-26 11:31 GMT
தஞ்சை மாவட்டம் வல்லத்தில் அனுமதியின்றி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 லாட்டரி சீட்டுக் கட்டுகள், 600 ருபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
வல்லம்:

தஞ்சை அருகில் உள்ள வல்லம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ்சந்திரபோஸ் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று வல்லம் கடைவீதி அருகே உள்ள சிவன் கோவில் பகுதியில் நின்றிருந்த நபர் அங்கு மறைத்து வைத்து லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் அந்த நபரை பிடித்தனர். விசாரணையில் அவர் வல்லம் ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 55) என்பது தெரியவந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார் பன்னீர் செல்வத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 14 லாட்டரி சீட்டுக் கட்டுகள், 600 ருபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Tags:    

Similar News