செய்திகள்
கோப்புபடம்

தென்காசியில் இன்று வங்கி மேலாளர் உள்பட புதிதாக 45 பேருக்கு கொரோனா

Published On 2021-04-08 12:16 GMT   |   Update On 2021-04-08 12:16 GMT
தென்காசி மாவட்டத்தில் வங்கி மேலாளர் உள்பட புதிதாக 45 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதில் சென்னையில் இருந்து வந்த ஒருவர் மற்றும் 15 பேருக்கு ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இதே போல சங்கரன்கோவிலில் வங்கி பெண் ஊழியர் ஒருவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் வங்கி மேலாளர் உள்பட 5 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதே போல பாதிப்பு உறுதி செய்யப்பட்டதில் பூத் ஏஜெண்டு ஒருவர் ஆவார். இவருக்கு நேற்று முன்தினம் தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் அவரது மனைவி, தாய், மகன் ஆகியோருக்கு இன்று பாதிப்பு உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Tags:    

Similar News