செய்திகள்
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்

தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டாம்- தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்

Published On 2021-01-17 07:12 GMT   |   Update On 2021-01-17 07:12 GMT
தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டாம் என்றும், பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகே தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
ஐதராபாத்:

தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகே தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும். பல நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை வழங்குகிறது. 

2 தடுப்பூசிகளும் பாதுகாப்பானது தான் என்பதை உறுதியாக கூறுகிறேன். தடுப்பூசி தயார் செய்யும் இடத்திற்கு நான் நேரில் சென்று பார்த்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐதராபாத் நிம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை நேற்று ஆளுநர் தமிழிசை துவக்கி வைத்தார். அப்போது அனைத்து முன்களப் பணியாளர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
Tags:    

Similar News