ஆன்மிகம்
முருகன்

சூரசம்ஹாரம்... இன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்

Published On 2021-11-09 06:17 GMT   |   Update On 2021-11-09 06:17 GMT
சூரசம்ஹாரம் மற்றும் செவ்வாய் கிழமைகளில் முருகனுக்கு உகந்த அருணகிரி நாதர் வழங்கிய இந்த ஸ்லோகத்தை சொல்லி முருகப்பெருமானை வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும்.
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

- அருணகிரி நாதர்
Tags:    

Similar News