செய்திகள்
பட்டாசு கடை உரிமம் - 22ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்
பட்டாசு கடை உரிமம் பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தற்காலிக பட்டாசு கடை உரிமம் வழங்கி வருகிறது. மாநகர காவல் எல்லையில் கமிஷனர் அனுமதி வழங்குகிறார்.
தற்காலிக பட்டாசு கடை நடத்த உரிமம் கேட்டு விண்ணப்பிக்க, செப்டம்பர் 30-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. கடை உரிமையாளர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 22-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கள ஆய்வு நடத்தி வரும் 27-ந் தேதி வரை, தற்காலிக பட்டாசு கடை உரிமம் வழங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பட்டாசு கடை உரிமம் பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.