செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுச்சேரியில் இன்று 69 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-11-19 08:53 GMT   |   Update On 2020-11-19 08:53 GMT
புதுச்சேரியில் இன்று 69 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,533 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89.58 லட்சமாக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 89,58,484 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 45,576 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 585 பேர் மரணம்  அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,31,578 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில  தினங்களாக 40 ஆயிரத்திற்கும் கீழே இருந்த புதிய பாதிப்புகள், இன்று 45 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 83,83,603 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 48,493 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் இன்று 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,533ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News