செய்திகள்
முதல்வர் மு.க. ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ்

30 ஆண்டுகள்: ஆளுநரை முதல்வர் நேரில் சந்தித்து 7 பேர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும்- டாக்டர் ராமதாஸ்

Published On 2021-06-11 08:44 GMT   |   Update On 2021-06-11 08:44 GMT
பேரறிவாளன் உள்ளிட்டோர் சிறைக்கு சென்று 30 ஆண்டுகள் ஆகிய நிலையில், அவர்களின் விடுதலையை முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை விவகாரத்தை குடியரசுத் தலைவரின் முடிவுக்குக் கொண்டு செல்வது, மாநில அரசின் உரிமைகளை தாரைவார்ப்பதாகும். விடுதலையை தாமதிக்கும் செயல்.

2018 அமைச்சரவை பரிந்துரை மீது விரைந்து முடிவெடுக்க ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து விடுதலையை உறுதி செய்ய வேண்டும்.

அதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சிறை சென்ற மகன் பேரறிவாளன் விடுதலையாகி வீடு திரும்புவதைக் கண்டு அவரது வயது முதிர்ந்த தாயும், தந்தையும் மகிழ்ச்சியடைவதை உறுதி செய்ய வேண்டும்.

என பா.மக. நிறுவனம் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News