உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உடுமலையில் வீடு புகுந்து திருட்டு

Published On 2022-05-05 06:38 GMT   |   Update On 2022-05-05 06:38 GMT
உள்பக்க அறையிலிருந்த டிவி, லேப்டாப் மற்றும் செல்போன் ஆகியவை காணாமல் போயிருந்தது
உடுமலை:

உடுமலை நேரு வீதியில் குடியிருந்து வருபவர் அனீஸ்(வயது 32). உடுமலையில் கணினி மையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல அனைவரும் தூங்கச் சென்றுள்ளனர். அனீஸ் மனைவியுடன் உள் அறையில் தூங்கிய நிலையில் மாமியார் வெளியே தூங்கியுள்ளார்.

நள்ளிரவில் பாத்ரூம் போவதற்காக அனீஸ் அறையிலிருந்து வெளியே வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு தாழ்ப்பாள் திறந்த நிலையில் இருந்துள்ளது. மேலும் உள்பக்க அறையிலிருந்த டிவி, லேப்டாப் மற்றும் செல்போன் ஆகியவை காணாமல் போயிருந்தது.

அத்துடன் அவருடைய மாமியார் கழுத்திலிருந்த   5 பவுன் தங்க சங்கிலியும் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அனீஸ் உடுமலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு தேன்மொழிவேல் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். 

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே துணிச்சலாக வீடு புகுந்து திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News