செய்திகள்
மூதாட்டி மரணம்.

திருவாரூரில் குளக்கரையில் இறந்து கிடந்த மூதாட்டி

Published On 2019-10-18 17:32 GMT   |   Update On 2019-10-18 17:32 GMT
திருவாரூர் கமலாலயகுளம் வடக்கு கரையில் 84 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவாரூர்:

திருவாரூர் கமலாலயகுளம் வடக்கு கரையில் 84 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பது பொதுமக்களுக்கு தெரியவந்தது. இதுபற்றி அவர்கள் கிராம நிர்வாக அலுவலர் அபிராமிக்கு தகவல் கொடுத்தனர்.

அவர் இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்பரசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த மூதாட்டி யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News