செய்திகள்
கோப்புபடம்

உடுமலை சாலையில் ரிப்ளக்டர் அமைக்க கோரிக்கை

Published On 2021-10-12 09:34 GMT   |   Update On 2021-10-12 10:19 GMT
உடுமலை சாலைகளில் இரவு பகலில் கண்டெய்னர் லாரிகள் முதல் இரு சக்கர வாகனங்கள் வரை போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது .
உடுமலை:

உடுமலை வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு மட்டுமன்றி கேரள மாநிலத்திற்கும் அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் சாலைகளில் இரவு பகலில் கண்டெய்னர் லாரிகள் முதல் இரு சக்கர வாகனங்கள் வரை போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. ஆனால் முக்கிய சாலை சந்திப்புகளில் பிரதிபலிக்கும் ரிப்ளக்டர்கள் வைக்கப்படவில்லை.

பொள்ளாச்சி ரோட்டில் முக்கோணம், அந்தியூர், கோமங்கலம், புதூர் பகுதியில் இந்த நிலை காணப்படுகிறது. எனவே இரவில் முகப்பு விளக்கு வெளிச்சத்தை பிரதிபலித்து வாகனங்கள் வருவதை தெரியப்படுத்த முக்கிய சாலை சந்திப்புகளில் ரிப்ளக்டர் வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News